News

சீனாவில் உணவகத்தில் பயங்கர தீ விபத்து – 17 பேர் பலி, 3 பேர் காயம்.

 

சீனாவில் உணவகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர்.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாங்சுன் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top