News

 ஈரானில் ஹிஜாப் போராட்டத்தால் இளம்பெண் இறந்து 40-வது நாள் நினைவு ஊர்வலம் – போலீஸ் துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி

 

ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி டெஹ்ரானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண் மாஷா அமினி மர்மமாக இறந்தார்.

போலீசார் தாக்கியதால் அவர் பலியானதாக குற்றச் சாட்டு எழுந்தது. அதன்பிறகு ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும், எரித்தும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீ சாருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மாஷா அமினி இறந்து 40 நாள் ஆனதையொட்டி அவரது சொந்த ஊரில் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பாதுகாப்புப் படை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் இறந்துவிட்டனர். இச்சம்பவத்துக்கு அந்நாட்டு மனித உரிமை துறை கடும் கண்டனம் தெரிவித்தது. சட்டவிரோதமாக பொறுப்பற்ற முறையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top