News

அமெரிக்காவில் மதுபாரில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி, மேலும் 2 பேருக்கு படுகாயம்

அமெரிக்காவில் இரவு நேர மதுபாரில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கன்சாஸ் நகரில் உள்ள மதுபாரில் பலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் சிலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஒரு நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். எனினும் இந்த தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top