News

அமெரிக்காவில் இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சியில் சிறுவன் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி, 4 பேர் படுகாயம்

அமெரிக்காவில் (us)வோஷிங்டன் மாகாணத்தில் அமைந்துள்ள சியாட்டில் நகரின் டகோமா பகுதியில் உள்ள வீட்டில் இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இரவு 12 மணியளவில் (உள்நாட்டு நேரப்படி) கேளிக்கை நிகழ்ச்சி நடந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் மீது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவனை கைதுசெய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top