இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை எந்தவித கருத்தையும் தெரிவிக்காதிருந்த நிலையில் தற்போது சாதகமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைக்காட்சி செவ்வியொன்றில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று யாராவது அடையாளப்படுத்த முனைவார்களாக இருந்தால் அவர்களை இலங்கை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அவரின் கருத்தை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையில் சில விடயங்கள் எதிரொலித்துள்ளன.
ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் ஐ.நாவின் துணை செயலாளர் காசாயுத்ததை இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு இணையான ஒருபடுகொலை தான் காசாவில் இடம்பெறுகின்றது என்ற ஒரு முக்கியமான விடயத்தையும் முன்வைத்துள்ளார்.