Canada

கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேர்!

 

 

கனடா பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கனடாவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசித்து வரும் நிலையில், அதற்கேற்றாற் போல, அமைச்சரவையில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இந்திய வம்சாளியினரான அனிதா ஆனந்த், மனீந்தர் சித்து, ரூபி சஹோதா, ரந்தீப் சாராய் ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளியான அனிதா ஆனந்த், 1967ம் ஆண்டு மே 20ம் தேதி கென்ட்விலேவில் பிறந்தார். இவரது தந்தை தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தாய் பஞ்சாப்பை சேர்ந்தவர். கடந்த முறை தொழில்துறை, அறிவியல் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த்,57, பதவி வகித்து வந்தார்.

தற்போது, முக்கிய துறையான வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், வெளியுறவுத்துறை அமைச்சராக ஒரு ஹிந்து முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக, பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சகம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் கவனித்து வந்துள்ளார்.

பிராம்டன் கிழக்கு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மனீந்தர் சித்து, சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக வரி உயர்வு அச்சுறுத்தலை மேற்கொண்டு வரும் நிலையில், இவரது துறையின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சித்து பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர். சிறுவயதிலேயே பிராம்டனுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். டோரன்டோ பல்கலையில் பட்டப்படிப்பை படித்து முடித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top