அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு (Donald Trump) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில், முன்னாள் எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சியின் போது, எப்.பி.ஐ (FBI) இயக்குநராக ஜேம்ஸ் கோமி நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு, 2017 ஆம் ஆண்டு புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட போது, கேமி அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்தநிலையில், கடற்கரையில் கடல் ஓடுகளை வைத்து “8647” என்ற வடிவத்தில் வைத்து பதிவு ஒன்றை கோமி பதிவிட்டுள்ளார்.
இதில், 86 என்பது கொலை செய்ய வேண்டும் என்று அர்த்தம்படுவதாகவும், 47 என்பது அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதி என்பதை குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்தப் பதிவை ஜேம்ஸ் கோமி நீக்கி விட்டார்.
இந்தநிலையில், எந்த உள்நோக்கத்திலும் அந்தப் பதிவை போடவில்லை என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரானவன் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
கோமியின் இந்தப் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கிரிஸ்டி நோம், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது