News

புதிய பாப்பரசர் தெரிவில் தோல்வியடைந்த வத்திக்கான்

 

வத்திக்கானில் உள்ள உலக கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவர் தெரிவு இன்று முடிவை எட்டவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசர் பிரான்ஸிசின் மரணத்திற்கு பின்னர், புதிய பாப்பரசர் தெரிவுக்கான மாநாடு இன்று முதல் நாளாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து கருப்பு புகை வெளியேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய,  மாநாட்டின் முதல் நாளில் கர்தினால்கள் ஒரு புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்கவில்லை.

இந்நிலையில், சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேறியவுடன், செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த பெரும் கூட்டத்தைச் சேர்ந்த பலர் விரைவாக வெளியேறியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top