ஈரான் ஒருபோதும அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என ஜி7 மாநாடு நிறைவு விழாவில் கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில் தெரிவித்தனர்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது, ‘ஜி – 7’ அமைப்பு. நடப்பாண்டிற்கான, ‘ஜி – 7’ நாடுகளின் உச்சி மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் என்ற இடத்தில் நடந்தது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.
ஜி7 மாநாடு நிறைவு விழாவில் கனடா பிரதமர் மார்க் கார்னி பேசியதாவது: மீண்டும் உயர் தூதர்களை நியமிக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பிரதமர் மோடி உடன் இன்றைய சந்திப்பு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். பிரதமர் மோடி 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு G7 மாநாட்டிலும் கலந்து கொண்டார். அடுத்த ஆண்டு பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் வருவார் என்று நான் முழுமையாக எதிர்பார்க்கிறேன்.
உக்ரைன் தங்கள் நாட்டின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ட்ரோன்கள், வெடிமருந்துகள் ஆகியவற்றிற்காக இரண்டு பில்லியன் டாலர்களுக்கு மேல் நிதியுதவியையும், உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப 2.3 பில்லியன் டாலர் கடனையும் நாங்கள் அனுப்புகிறோம். இவ்வாறு கனடா பிரதமர் மார்க் கார்னி பேசினார்.