அமெரிக்கா தனது அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதற்கு பதிலடியாக, கட்டாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீது ஈரான் “சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான ஏவுகணைத் தாக்குதலை” நடத்தியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“சர்வவல்லமையுள்ள கடவுளையும், ஈரானின் விசுவாசமுள்ள, பெருமைமிக்க மக்களையும் நம்பி, ஈரான் இஸ்லாமிய குடியரசு, அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை அல்லது தேசிய பாதுகாப்புக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் ஒருபோதும் பதிலளிக்காமல் விடாது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை அதன் வான் பாதுகாப்புப் படைகள் “வெற்றிகரமாக” முறியடித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
மேலும், வெளிப்படையான ஆக்கிரமிப்பின் தன்மை மற்றும் அளவிற்கு ஏற்பவும், சர்வதேச சட்டத்தின்படியும் நேரடியாக பதிலளிக்கும் உரிமை கட்டார் அரசுக்கு உள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி கூறியுள்ளார்.
JUST IN: Qatar confirms that Iranian missiles launched toward U.S. Al Udeid Air Base were successfully intercepted.
There are no reports of any damage or injuries.
"We reassure that Qatar’s air defenses successfully thwarted the attack and intercepted the Iranian missiles."… pic.twitter.com/BtIAS2r4Sq
— Collin Rugg (@CollinRugg) June 23, 2025
இரண்டாம் இணைப்பு
கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை நோக்கி ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகளை அமெரிக்கா கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தும், கூட்டுப் படைத் தலைவர் டொன் கெய்னும் இதற்கு தலைமை தாங்குவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கட்டாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளத்திற்கு ஏற்படக்கூடிய தாக்குதல் அச்சுறுத்தல்களை வெள்ளை மாளிகை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது
குறித்த தளம் மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ நிறுவல் ஆகும்.
கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்களை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது 6 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக இஸ்ரேலிய தரப்பு கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்படப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல், ஈரானின் அணு ஆயுத தளங்களான ஃபோர்டோ, நாடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு (ஜூன் 21-22, 2025) பதிலடியாக நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இந்த வெடிப்புகள் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதன் விளைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறித்த தாக்குதல் தொடர்பில் வெற்றி (Annunciation of Victory) என்று ஈரான் பெயரிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல், அல்-உதைத் மற்றும் ஈராக்கில் உள்ள அய்ன் அல்-அசாத் தளங்களை இலக்காகக் கொண்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் தாக்குதல் அச்சம் காரணமாக, கட்டார் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளது.
இது பயணிகள் விமானங்கள் மற்றும் பிற விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க மற்றும் பிரித்தானிய தூதரகங்கள் கட்டாரில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளன.
கட்டார் வெளியுறவு அமைச்சகம், இந்த நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகவும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை நிலையானதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அல்-உதைத் விமான தளம், மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமாகும்.
இது அமெரிக்க மத்திய கட்டளையின் (CENTCOM) முன்னணி தலைமையகமாகவும், அமெரிக்க விமானப்படையின் 379வது விமானப் பிரிவு மற்றும் கூட்டணி படைகளின் மையமாகவும் செயல்படுகிறது.
இந்த தளத்தில் 10,000 அமெரிக்க வீரர்கள் மற்றும் பிரித்தானிய படைகளும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
B-52 குண்டுவீச்சு விமானங்கள், F-22 ராப்டர் போர் விமானங்கள், மற்றும் KC-135 வானிலிருந்து எரிபொருள் நிரப்பும் விமானங்கள் உள்ளிட்ட மேம்பட்ட விமானங்கள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் அணு ஆயுத தளங்களைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் ஈரானின் அணு ஆயுத திட்டம் பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரான், இதற்கு பதிலடியாக அமெரிக்க தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவதாக அறிவித்தது.
ஈரானின் இந்தத் தாக்குதல், 2020 ஆம் ஆண்டு ஈராக்கில் உள்ள அல்-அசாத் தளத்தைத் தாக்கியதை விட பெரிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.