நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களின் தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெனுவே மாகாணத்தில் யெலேவடா கிராமத்தில், திடீரென புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
இத்தாக்குதலில் 100 பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலரது வீடுகளுக்கு தீவைக்கப்பட்டு, குடும்பத்துடன் எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய மருத்துவ வசதி இல்லாதுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக நிலத்தை தேடுபவர்களுக்கும், நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான நிலப் பிரச்சினையில் தொடங்கி, இன மற்றும் மதங்கள் அளவிலான பிரச்சினைகள் வரையில் மோதல்கள் உருவாவதாகக் குறிப்பிடப்படுகிறது.