News

மால்டோவா வழியாக உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல்: ரஷ்யாவின் அதிரடி நகர்வு

மற்றொரு கிழக்கு ஐரோப்பிய நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு 10,000 துருப்புக்களை அனுப்ப ரஷ்யா (Russia) திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) போர் வெறி ஐரோப்பிய கண்டம் முழுவதும் மேலும் பரவும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.

இதன்படி, டிரான்ஸ்னிஸ்ட்ரியாவிற்குள் துருப்புக்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டு வருவதாக மால்டோவாவின் (Moldova) பிரதமர் எச்சரித்துள்ளார்.

டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதியானது மால்டோவாவின் ஒரு பகுதி என சர்வதேச சமூகம் ஒப்புக்கொண்டுள்ள போதும், அப்பகுதியானது ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்து வருகின்றது.

உக்ரைனுக்கும் மால்டோவாவிற்கும் நடுவே அமைந்துள்ள இப்பகுதியானது கடந்த 33 ஆண்டுகளாக பிரிவினைவாதிகாளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதுமட்டுமல்லாது டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதியானது ரஷ்யாவிடமிருந்து குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவைப் பெற்றுவருகின்றது.

அத்தோடு, இந்தப் பிராந்தியத்தின் அரசியல்வாதிகள் அது ரஷ்யாவின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மால்டோவா மற்றும் உக்ரைனில் உள்ள ஐரோப்பிய ஆதரவு அரசாங்கங்களுக்கு இடையில் இந்தப் பகுதி அமைந்திருப்பதால், புடினால் தற்போது வீரர்களை உள்ளே அனுப்புவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மால்டோவா தற்போது ஐரோப்பிய ஒன்றிய நட்பு அரசாங்கத்தைக் கொண்டிருந்தாலும், அதன் பிரதமர் இந்த செப்டம்பரில் நடக்கவிருக்கும் அதன் தேர்தலில் ரஷ்யா தலையிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மால்டோவாவிடமிருந்து சுதந்திரப் போரில் ரஷ்யா அந்தப் பிராந்தியத்தை ஆதரித்ததன் பின்னர் 1992 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய துருப்புக்கள் டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் தளம் அமைத்துள்ளது.

இருப்பினும், தற்போது வெறும் 1500 வீரர்கள் மட்டும் ரஷ்யா சார்பாக போரிட்டு வருகின்றனர்.

ஆனால், இவர்களில் சில எண்ணிக்கை மட்டுமே உண்மையில் ரஷ்யாவால் அனுப்பப்பட்டவர்கள், பெரும்பாலானோர் பதிவு செய்த உள்ளூர்வாசிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

டிரான்ஸ்னிஸ்ட்ரியா சர்வதேச அளவில் ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதுடன் அது ஐ.நா.வின் உறுப்பினராகவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யா டிரான்ஸ்னிஸ்ட்ரியாவைப் பயன்படுத்தி போரில் ஒரு புதிய முன்னணியை உருவாக்கினால், உக்ரைனுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top