News

B-2 விமானத்தாலும் தகர்க்க முடியாத ஈரானின் அணுசக்தி நிலையம்

ஈரானின் (Iran) இஸ்ஃபஹான் (Isfahan) அணுசக்தி வளாகத்தில் பங்கர் பஸ்டர் பயன்படுத்துவதை அமெரிக்க இராணுவம் வேண்டுமென்றே தவிர்த்தது என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

குறித்த வளாகம் பூமியில் இருந்து மிக ஆழமாக அமைந்துள்ளது, பெரிதும் பேசப்பட்ட B-2 குண்டுவீச்சு விமானங்களால் சேதப்படுத்த முடியாது என்பதை அதிகாரிகள் உணர்ந்ததாலையே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஜெனரல் டான் கெய்ன் ஒரு ரகசிய செனட் மாநாட்டில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ஃபஹான் அணுசக்தி நிலையத்தில் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் 60 சதவீதம் சேமித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது அமெரிக்காவின் GBU-57 என்ற பெரிதும் கொண்டாடப்படும் வெடிகுண்டால் எட்ட முடியாத அளவுக்குப் புதைக்கப்பட்டுள்ளது.

B-2 விமானத்தாலும் தகர்க்க முடியாத ஈரானின் அணுசக்தி நிலையம் : அம்பலமான தகவல் | B 2 Bunker Buster Bombs Ineffective

இருப்பினும் அந்த நிலையத்தின் பூமிக்கு மேலிருக்கும் கட்டுமானங்களை அமெரிக்காவின் Tomahawk ஏவுகணைகள் சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் அணுசக்தி நிலையங்கள் மீது B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் 14 GBU-57 குண்டுகளை வீசின. இஸ்ஃபஹான் அணுசக்தி நிலையத்தை தகர்க்க வேறு திட்டங்கள் தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஈரானின் பெரும்பாலான அணுசக்தி பொருட்கள் இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவில் குவிந்துள்ளதாக சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் குறிப்பிட்டார்.

ஆனால், B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களால் ஈரானின் மொத்த அணுசக்தி நிலையங்களும் முற்றாக சிதைக்கப்பட்டதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

B-2 விமானத்தாலும் தகர்க்க முடியாத ஈரானின் அணுசக்தி நிலையம் : அம்பலமான தகவல் | B 2 Bunker Buster Bombs Ineffective

இனி ஈரான் பல ஆண்டுகாலம் போராட வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆயுத நிபுணர் ஜெஃப்ரி லூயிஸ் பகுப்பாய்வு செய்த செயற்கைக்கோள் படங்களில், தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு இஸ்ஃபஹானின் சுரங்கப்பாதைகளுக்கு அருகில் வாகனங்கள் இருப்பதையும்,

ஜூன் 27 ஆம் திகதிக்குள் நுழைவாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டதாகவும், இந்த நிலையில் அவர்கள் யுரேனியம் மொத்தம் நகர்த்தியிருக்கலாம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ஃபஹான் நிலையத்தைப் பொறுத்தமட்டில் 30,000 பவுண்டு எடைகொண்ட குண்டுகளாலும் நெருங்க முடியவில்லை என்றே நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top