News

கனடாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன்கனடா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் ஒன்டாரியோவில் வசிக்கும்    52 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் இந்த போதைப்பொருளை கனடாவிலிருந்து கட்டாரின் தோஹாவிற்கு வந்து, அங்கிருந்து கட்டார் எயார்வேஸ் விமானம் QR-662 ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

சந்தேகநபரிடமிருந்து 5 கிலோகிராம் கொக்கேய்ன் மற்றும் 12 கிலோகிராம் ஹஷீஷ் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 400 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top