செம்மணியில் மனித உடலங்களோடு சந்தேகத்துக்கிடமான பொருளொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த பொருளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குண்டு செயலிழக்க பிரிவினர் பொருளை பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி நீதிமன்ற கட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
குறித்த பொருள் ஆயுதத்தோடு காணப்படும் பரளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளத
இதேவேளை, செம்மணிaில் நேற்றையதினத்துடன்(05) 45 மனித எச்சங்கள் செம்மணியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.