துபாயில் பறக்கும் டாக்சி அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் பறக்கும் டாக்சி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வீடியோ வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார். மணிக்கு அதிகபட்சமாக 322 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த பறக்கும் டாக்சி அடுத்த ஆண்டு (2026) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் பஸ், மெட்ரோ ரெயில், டிராம் சேவை, டாக்சி சேவை மற்றும் படகு போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து பரிணாம வளர்ச்சியில் தற்போது துபாயில் பறக்கும் டாக்சி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கடந்த 2024-ம் ஆண்டில் துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் அமெரிக்க விமான நிறுவனமான ஜோபி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு துபாயில் மின்சாரத்தால் இயங்கும் பறக்கும் டாக்சியை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் இ-விடோல் என்ற மின்சாரத்தால் இயங்கும் பறக்கும் டாக்சியை உருவாக்கி காட்சிப்படுத்தியது. தொடர்ந்து நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் இதன் மாதிரி துபாய் எதிர்கால அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
கடந்த 2024-ம் ஆண்டில் துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் அமெரிக்க விமான நிறுவனமான ஜோபி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு துபாயில் மின்சாரத்தால் இயங்கும் பறக்கும் டாக்சியை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் இ-விடோல் என்ற மின்சாரத்தால் இயங்கும் பறக்கும் டாக்சியை உருவாக்கி காட்சிப்படுத்தியது. தொடர்ந்து நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் இதன் மாதிரி துபாய் எதிர்கால அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 25 சதவீத தானியங்கி பயணங்களை அடைவதை நோக்கமாக கொண்ட கொள்கையின் அடிப்படையில் இந்த பறக்கும் டாக்சி வர்த்தக ரீதியில் இயக்கப்பட உள்ளது. முன்னதாக நேற்று துபாய் பாலைவன பகுதியில் முதலாவது பறக்கும் டாக்சியின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதற்காக பாலைவன பகுதியில் பறக்கும் டாக்சி நின்று மேலெழும்ப மற்றும் தரையிறங்கும் வகையில் மைதானம் நிறுவப்பட்டது. தொடர்ந்து சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பார்வையிட்டார். பின்னர் அந்த பறக்கும் டாக்சியில் ஏறி அமர்ந்து அதில் உள்ள சிறப்பம்சங்களை ஜோபி நிறுவன அதிகாரி விளக்கி கூறினார்.