News

அமெரிக்காவில் கோர விபத்து – ஒரு குழந்தை உட்பட பலர் பலி

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் சுற்றுலா பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல சுற்றுலா தலமான நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டு ரசித்து விட்டு, சுற்றுலா பயணிகள் ஒரு பஸ்சில் நியுயார்க் திரும்பிக் கொண்டு இருந்தனர். இந்த பஸ்சில் மொத்தம் 54 பேர் பயணித்துள்ளனர். பெரும்பாலோனார் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

பெம்பிரோக் என்ற நகரத்திற்கு அருகில் பஸ்சானது வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ், விபத்தில் சிக்கியது. இதில் ஒரு குழந்தை உட்பட  5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் கோர விபத்து - ஒரு குழந்தை உட்பட பலர் பலி | Tourist Bus Accident In New York

பேருந்தில் ஓட்டுநர் உட்பட 52 பேர் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு பட்டி அணியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மீட்புக்குழுவினர் கூறியதாவது;

சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போது சரக்கு லாரியுடன் மோதுவதை தவிர்க்க பஸ்சை திருப்பியபோது விபத்து நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதில் உண்மை இல்லை. விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகிறோம். 24க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

 

பஃபலோ நகரத்திலிருந்து 48 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பெம்பிரோக் நகரத்திற்கு அருகில் I-90 இல் உள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top