News

ஜேர்மனியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மேயருக்கு கத்திக்குத்து

 

ஜேர்மனியில் (Germany) புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெண் மேயர் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியில் உள்ள ரூர் பிராந்தியத்தில் ஹெர்டெக்கே நகரில் புதிய மேயராக ஐரிஸ் ஸ்டால்ஸர் என்பவர் தேர்தெடுக்கப்பட்டார்.

இவர் மேயராக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடலின் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இவர் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மனியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மேயருக்கு கத்திக்குத்து | Germany Mayor Stabbed In North Rhine Westphalia

அடுத்த சில நாட்களில் பதவியேற்கவிருந்த நிலையில், அவரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டிற்கு வந்த சில ஆண்கள் தன் தாயை தாக்கி கத்தியால் குத்தியதாக அவருடைய 15 வயது வளர்ப்பு மகன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வளர்ப்பு மகனை சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top