அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்த முயன்றதாக, எட்டாவது கப்பலை அமெரிக்க ராணுவம் தகர்த்துள்ளது.
இதையடுத்து, வெனிசுலாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும், போதைப் பொருட்களை கடத்தும் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கரீபியன் கடல் பகுதியில் இதுவரை ஏழு கப்பல்களை, அமெரிக்க ராணுவம் தகர்த்துள்ளது.
இந்த நிலையில், கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப் பொருட்களுடன் சென்ற கப்பலை தாக்கி அழித்ததாக அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத், ‘ வீடியோ’ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பழுப்பு நிற பைகள் நிரம்பிய சிறிய படகு ஒன்று கடலில் செல்கிறது. சில வினாடிகளில் அது வெடித்து தீப்பற்றி எரிகிறது.
அல் – குவைதா பயங்கரவா திகள் நம் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தது போல, இந்த போதைப்பொருள் கும்பல்களும் நம் மக்களுக்கு எதிராக போர் தொடுத்துள்ளன’ என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இவர்களுக்கு புகலிடமோ, மன்னிப்போ கிடையாது; நீதி மட்டுமே’ என்றும் ஹெக்செத் கடுமையாக எச்சரித்துள்ளார்.
