News

மியன்மார் இராணுவம் தாக்குதல் குழந்தைகள் உட்பட 40 பேர் பலி,80 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

 

மியன்மார் மத பண்டிகையின்போது, அந்நாட்டின் இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 80 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு ஆட்சியைக் கலைத்து, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அந்நாட்டை ராணுவ அரசு ஆட்சி செய்து வருகின்றது. இதனால், ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், மத்திய மியான்மரின் சாங் யூ நகரில் மத திருவிழாவுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் திங்கட்கிழமை மாலை அப்பகுதியில் கூடியிருந்தனர். அப்போது, இரவு 7 மணியளவில் மியான்மர் இராணுவத்தினர் பாராகிளிட்டர் மூலம் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், குழந்தைகள் உட்பட 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 80 -க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top