News

கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

கிளிநொச்சி – கனகபுரம் துயிலும் இல்லத்தில்  மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு  நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இதன்படி, சற்று முன்னர் தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர் கொடுத்த வீர மறவர்களை நினைவேந்தி பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

பொதுச் சுடரினை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் சகோதரரும், மூத்த போராளியுமான மூர்த்தி அவர்கள் ஏற்றி வைத்தார்.

இதனையடுத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, வீர மரணம் கண்ட மாவீரர்களை கண்ணீரோடு மக்கள் அஞ்சலித்து வருகின்றனர்.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி  நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top