News

வல்வெட்டித்துறை தீருவிலில் மாவீரர் நினைவேந்தல்கள் முன்னெடுப்பு

வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை தீருவிலில் வழமை போன்று இம்முறையும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் பெரும் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

   

பலத்த காற்றுக்கும் மழைக்கும் மத்தியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை – உடுப்பிட்டி வீதியில் கம்பர்மலை சந்தியில் அமைந்துள்ள முதலாவது மாவீரர் சங்கரின் (சத்தியநாதன் சிலையடி) நினைவிடத்தில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் மாவீரர் தினம் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top