News

அமெரிக்காவில் தொடரும் ட்ரம்பின் அடக்குமுறை! 5 வயது சிறுவன் கைதால் பரபரப்பு

அமெரிக்காவில், 5 வயது சிறுவனை ICE அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவமானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தன் பின்னர் அமெரிக்காவில் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் மீது கடுமையான அடக்குமுறை இருந்து வருகிறது.

ICE – குடிவரவு அதிகாரிகள் ஏகபோக அதிகாரம் பெற்று சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி 7 ஆம் திகதி, காரை விட்டு இறங்க மறுத்ததாக 37 வயதான ரெனி நிக்கோல் குட் என்ற பெண் ICE அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவில் தொடரும் ட்ரம்பின் அடக்குமுறை! 5 வயது சிறுவன் கைதால் பரபரப்பு | Ice Operation Detains 5 Year Old Boy Arrest Us

தற்போது,அமெரிக்காவில், 5 வயது சிறுவனை ICE அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவமான பல்வேறு விமர்சனங்களுக்குட்பட்டு வருகின்றது.

மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபோலிஸ் நகரில் பெற்றோருடன் வசித்து வந்த 5 வயது சிறுவன் லியாம் கோனேஜோ ராமோஸ் பாடசாலை முடிந்து தந்தையுடன் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவர்களை வழிமறித்து ICE அதிகாரிகள்இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவரையும் அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 5 வயது சிறுவன் கைது

அங்கு சிறுவனை பகடையாக வைத்து வீட்டுக்குள் இருந்த தாயையும் வெளியே வரவழைத்து கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர். ஆனால் சிறுவனின் தந்தை தனது மனைவியை கதவை திறக்க வேண்டாம் என வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் தொடரும் ட்ரம்பின் அடக்குமுறை! 5 வயது சிறுவன் கைதால் பரபரப்பு | Ice Operation Detains 5 Year Old Boy Arrest Us

 

இதன்பின் சிறுவனையும் தந்தையையும் ICE தடுப்புக்காவலில் அடைத்தனர். சிறுவனின் தந்தை முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருந்ததாக குற்றம்சாட்டி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஆனால் அவர்களின் குடும்ப வழக்கறிஞர் மார்க் ப்ரோகோஷ் கூறுகையில், 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த லியாமின் குடும்பம், புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர், அதன் பிறகே அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

ஆனாலும், அமெரிக்க குடியேற்றத் துறை அவர்களைக் கைது செய்துள்ளது. இருவரையும் அதிகாரிகள் டெக்சாஸில் உள்ள தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

லியாம் மட்டுமின்றி, இரண்டு 17 வயது சிறார்கள் மற்றும் ஒரு 10 வயது சிறார் என மொத்தம் நான்கு குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவன் பயின்று வந்த கொலம்பியா ஹைட்ஸ் பள்ளி கண்காணிப்பாளர் ஜீனா ஸ்டென்விக் தெரிவித்துள்ளார்.

 

நீல நிறத் தொப்பி மற்றும் ஸ்பைடர்மேன் பையை முதுகில் சுமந்தபடி, பயத்தில் உறைந்து நிற்கும் லியாமின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பரவலாகி வருகின்றன.

5 வயது சிறுவனைத் தடுப்புக்காவலில் வைத்தது மிகவும் எல்லை மீறிய செயல் என்றும், இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அமெரிக்க முன்னாள் துணை ஜனாதபதி கமலா ஹாரிஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top