News

அமெரிக்கா சிறை பிடித்துள்ள வெனிசுலா அதிபரை நாடு கடத்த அர்ஜென்டினா கோரிக்கை

 

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்கா சிறை பிடித்து தங்களது நாட்டுக்கு அழைத்து சென்றது. அவர்கள் மீது அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குக்காக நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்துமாறு அமெரிக்காவிடம் அர்ஜென்டினா கோரிக்கை விடுத்துள்ளது.

நிக்கோலஸ் மதுரோ மீது மனித உரிமை அமைப்புகளால் கடந்த 2023-ம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணைக்காக நிக்கோலஸ் மதுரோவை அர்ஜென்டினாவுக்கு நாடு கடத்துமாறு அர்ஜென்டினா கோர்ட்டு நீதிபதி செபாஸ்டியன் ராமோஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top