News

ரஷ்ய துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

 

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகங்களில் ஒன்றின் மீது உக்ரைன் நேற்று முன்தினம் ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ள சூழலில் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிராஸ்நோடர் பிராந்தியத்தில் உள்ள தமன் துறைமுகத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதலில் இருவா் பலத்த காயங்களுககு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் எரிசக்தி, குடிநீா் விநியோகம் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புகள் என்பன பெரிதும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் விளைவாக ஒடேசா பிராந்தியத்தில் மின் விநியோகம் முழுவதுமாக தடைபட்டுள்ளது.

இதேநேரம் ஜொ்மனியின் மியூனிச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது. ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல், உக்ரைனை மட்டும் குறிவைப்பது சரியான முறையல்ல. இப்பிரச்சினையில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள், எதிர்வரும் காலங்களில் முக்கியப் பங்காற்ற வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top