News

இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் !

இஸ்ரேல் இன்று (28) அதிகாலை ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தற்போது இஸ்ரேல் மீது எதிர்த் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து, இஸ்ரேலில் பாதுகாப்பு நிலைமை பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பாக பதுங்கு குழிகளில் தஞ்சமடையுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று இஸ்ரேலிய ஹைபா பகுதியில் விழுந்து வெடித்துள்ளதாகவும் ஈரான் மீது அமெரிக்க மற்றுமொரு சுற்று தாக்குதலை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்க இராணுவமும் ஈரான் மீது “பாரிய போர் நடவடிக்கைகளை” ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top