தெற்கு லெபனானில் ஊடுருவியுள்ள இஸ்ரேல் படைகள், ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் கொலைக்குப் பழிவாங்குவதாக, இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினா் திங்கள்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கினா்.
இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லாவின் உளவுத் தலைமையகம், ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தெற்கு லெபனானுக்குள் தரைப்படைகளை அனுப்புவது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இஸ்ரேலின் வடக்கு எல்லைக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த ‘முன்னெச்சரிக்கை’ பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லெபனான் ராணுவம் பின்வாங்கல்: இஸ்ரேலின் இந்த அதிரடி நகா்வைத் தொடா்ந்து, எல்லைப் பகுதிகளில் உள்ள தனது முக்கிய நிலைகளில் இருந்து லெபனான் நாட்டு ராணுவம் வெளியேறி வருவதாக அந்நாட்டு தேசிய செய்தி முகமை தெரிவித்துள்ளது.
52 போ் உயிரிழப்பு: லெபனானில் கடந்த 2 நாள்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், இதுவரை 40 போ் உயிரிழந்துள்ளனா்; 246 போ் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
