ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் 50 வீத வரியை எதிர்கொள்ளும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சற்று முன்னர், அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதில், ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாடும் எந்த விலக்குமின்றி உடனடியாக 50வீத வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், SIPRI பதிவு செய்துள்ள தரவுகளின்படி, 2021 மற்றும் 2025க்கு இடையில், ஈரானின் இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் ரஷ்யாவிலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

