News

உக்ரைன் தலைநகரில் ட்ரோன் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்

உக்ரைன் தலைநகர் கீயூவில் ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன்  தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், அதனால் தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த 2022ஆம் ஆண்டு முதல் யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. இப் போர் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீயூவில் கடந்த வார இறுதியில் ரஷ்யா ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது.

இத் தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்ததோடு 10 பேர் காயமடைந்துளளனர் என்றும் கீயூவ் நகர இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top