News

பங்களாதேஷ் போராட்டத்தில் பாதுகாப்புப் படை கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு

 

பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல்களின் போது பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

சேக் ஹசீனாவின் சொந்த ஊரான கோபால்கஞ்சில், கடந்த ஆண்டு அவரது அரசாங்கத்தை கவிழ்த்த எழுச்சியை முன்னெடுத்த பல மாணவர்களைக் கொண்ட தேசிய குடிமக்கள் கட்சி (NCP) நடத்திய பேரணியை அவரது அவாமி லீக் கட்சி உறுப்பினர்கள் முறியடிக்க முயன்றதைத் தொடர்ந்து மோதல்கள் வெடித்தன.

பங்கதேசத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழுவான ஐன் ஓ சாலிஷ் கேந்திரா (ASK) “குறைந்தது இரண்டு பாரிய அரசியலமைப்பு உரிமை மீறல்களை அடையாளம் கண்டுள்ளது” என்று கூறியது.

“சட்ட அமுலாக்க தரப்புகள் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அமைதியான கூட்டத்தை நடத்தும் உரிமை நிலைநாட்டப்படவில்லை,” என்று அமைப்பின் சிரேஸ்ட ஒருங்கிணைப்பாளர் அபு அகமது ஃபைஜுல் கபீர் ஏஎப்பிக்கு தெரிவித்தார்.

பேரணியை முடித்த சிறிது நேரத்திலேயே மோதல்கள் வெடித்ததாகவும், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது ஒரு கூட்டம் செங்கற்களை வீசியதாகவும் கோபால்கஞ்சில் உள்ள உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக அறிக்கை மேற்கோள் காட்டியது.இராணுவம் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

“மோதல்களில் ஈடுபடாத பகுதிகள் உட்பட, 18 குழந்தைகள் உட்பட, அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்” என்றும் குறித்த அமைப்பு கூறியது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சில சிறுவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அறிக்கை மேலும் கூறியது.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வன்முறையை விசாரிக்க ஒரு விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top