சட்டவிரோதமாக ஐரோப்பா சென்ற இலங்கையர் இருவர், துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில், நேற்றையதினம் (30.10.2025) பெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதன்போது, அவருடன் இருந்த மற்றுமொரு இலங்கையரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றுமொரு நாட்டுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.
இதன்போது, பெலாரஸ் இராணுவத்தினரால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
