லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், நடந்த கொள்ளைச் சம்பவத்தினால் பல மணி நேரம் பயண இடையூறு ஏற்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 3 வயது சிறுமி உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது.
லண்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள டெர்மினல் 3 கேரேஜில், நான்கு ஆண்கள் கொண்ட குழு, ஒரு லிஃப்டில் இருந்த ஒரு பெண்ணின் சூட்கேஸைத் திருடி, எரிச்சலூட்டும் பொருளை அவர் மீது தெளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, கறுப்பு நிற உடையில் தலையை மூடிய மூன்று இளைஞர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
🚨Armed police and emergency crews rushed to Heathrow this morning after several people were assaulted with what police believe was pepper spray in a Terminal 3 car park. One man has been arrested and the victims were taken to hospital, with none of the injuries thought to be… pic.twitter.com/hxQbJ3zPzm
— Harrow Online (@harrowonline) December 7, 2025
மேலும், இதன் காரணமாக, பல மணிநேரங்கள் விமானங்கள் தாமதமாகிய நிலையில் பயண இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
