ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்பகுதி நாடுகளில் கடந்த மாதம் இறுதியில் இருந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே போன்ற நாடுகள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்ஆப்பிரிக்காவின் இரண்டு வடக்கு மாகாணங்களில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தென்ஆப்பிரிக்காவில் ஒரு வாரத்திற்குள் 400 மி.மீ. மழை பெய்துள்ளது.
