News

அமெரிக்கா: டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு!

 

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் ஆர்தர் பகுதியில் அமைந்துள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (23) பாரிய வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பலத்த வெடிப்பைத் தொடர்ந்து, அங்கு பாரிய தீ பரவியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்ட் ஆர்தரின் மேற்குப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குள்ளேயே இருக்குமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதியைத் தவிர்க்குமாறு வாகன சாரதிகளை டெக்சாஸ் மாநில போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு நகர முதல்வர் மற்றும் அவசர முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த சுத்திகரிப்பு நிலையமானது அமெரிக்காவின் மிகப்பெரிய நிலையங்களில் ஒன்றாகும். இது நாளொன்றுக்கு 360,000 பெரல் எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இந்த வெடிப்புக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top