News

ஹார்முஸ் நீரிணையைத் திறக்கப் பிரான்ஸ் அதிரடி முயற்சி: 35 நாடுகளுடன் அவசர ஆலோசணை

 

ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான வழிகள் குறித்துப் பிரான்ஸின் ஆயுதப் படைகளின் தளபதி 35 நாடுகளின் பிரதிநிதிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக உயர்மட்ட ஆலோசனையை நடத்தியுள்ளார்.

பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் நிலவும் சூழலில் சர்வதேசக் கடல் வர்த்தகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையில் பங்கேற்ற நாடுகளின் விவரங்களைப் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் பகிரங்கப்படுத்தவில்லை.

இருப்பினும், இந்த முயற்சி தற்போது நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும், இது ஒரு தற்காப்புத் தன்மை கொண்ட நடவடிக்கை மட்டுமே என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டவுடன் ஹார்முஸ் நீரிணை வழியாக மீண்டும் கப்பல் போக்குவரத்தை முறைப்படி ஒழுங்குபடுத்துவதே இந்த ஆலோசனையின் பிரதான நோக்கமாகும்.

ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதலால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரான்ஸின் இந்தத் தலையீடு சர்வதேச வர்த்தகச் சமூகத்தினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top