ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் போது அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு ஸ்பெயின் நாடு அனுமதி மறுத்துள்ளது.
இது நேட்டோ (NATO) கூட்டணி மீது வாஷிங்டனுக்கு ஏற்பட்டு வரும் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முதன்மை இராஜதந்திரியும் வெளியுறவுத்துறை அமைச்சருமான மார்கோ ரூபியோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “நேட்டோ கூட்டணி ஐரோப்பாவிற்கு ஏன் நல்லது என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் அது அமெரிக்காவிற்கு ஏன் நல்லது ? ஏனெனில் மத்திய கிழக்கு அல்லது பிற பகுதிகளில் ஏதேனும் அவசரநிலை ஏற்படும் போது அங்குள்ள இராணுவத் தளங்கள் மூலம் நமது அதிகாரத்தை நிலைநாட்ட அது நமக்கு வழிவகை செய்கிறது.
எனவே, நாம் நேட்டோ கூட்டணியில் இருப்பதற்கான முக்கிய காரணமே அதுவாக இருக்கும் போது ஸ்பெயின் போன்ற நாடுகள் அந்தத் தளங்களைப் பயன்படுத்த நமக்கு அனுமதி மறுக்கிறார்கள் என்றால் பிறகு நாம் ஏன் நேட்டோவில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
அது மிகவும் நியாயமான கேள்விதான்.
மேலும், அமெரிக்காவின் இந்த போர் நடவடிக்கைகளுக்கு நேட்டோ நாடுகள் காட்டிய எதிர்வினை குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
