News

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்

 

உக்ரைன் எல்லையிலிருந்து ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்த டிரோன்கள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தாக்கின. இதனால் அங்கு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு. கரும்புகை சூழ்ந் துள்ளது. ரஷியாவின் பால்டிக் கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள குரோன்ஸ்டாட் கடற்படைத் தளமும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக புல்கோவோ சர்வதேச விமான நிலையம் 6 மணி நேரம் மூடப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். முன்னதாக உக்ரைன் தலைநகரமான கீவ் மீது ரஷியா நடத்திய பயங்கர தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top