மாவீரர் மாதத்தை முன்னிட்டு யாழ். பல்கலை மாணவர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ். பல்கலையில் அமையப்பெற்றுள்ள மாவீரர் நினைவுத்தூபி வளாகம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இதனைதொடர்ந்து மாணவர்களால் மாவீரர் நினைவுத்தூபிக்கு ஆத்மார்த்தரீதியாக மலரஞ்ஞலி செலுத்தப்பட்டது.அதிகளவான மாணவர்கள் நினைவேந்தலில் பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது.