உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரானது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்து வருகின்றன.
போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டையும் அதிபர் புதின் முன்வைத்து உள்ளார்.
இந்நிலையில், போர் சூழலை பற்றி செய்தி சேகரிக்க சென்ற பிரபல அமெரிக்க பத்திரிகை நிருபர் ஒருவர், உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
மேலும் ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்கா அதிபர் உத்தரவிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நிறுவனத்தை சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷ்யா கைது செய்து உள்ளது.
இதுபற்றி குறித்த பத்திரிகை நிறுவனம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதோடு நிருபரின் உயிர்பாதுகாப்பு பற்றியும் கவலை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு துறை எனப்படும் எப்.எஸ்.பி. என்ற உளவு அமைப்பு வெளியிட்ட செய்தியில், யெகாடரீன்பர்க் மாகாணத்தில், உரால் மலைப்பிரதேச பகுதியில் வைத்து நிருபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க தரப்பு உத்தரவின்படி தனியாக செயல்பட்டு, ரஷ்ய இராணுவத்தின் தொழில் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றின் செயல்பாடுகள் பற்றி இரகசிய தகவல்களை சேகரித்து உள்ளார் என தெரிவித்துள்ளது.
இந்த தகவலை குறித்த பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை எனினும், உக்ரைன் போர் மற்றும் ரஷ்யாவின் வாக்னர் என்ற கூலிப்படை குழு ஆகியவற்றை பற்றி அவர் செய்தி சேகரித்து வந்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த உளவு குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால், ஈவானுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க கூடும்.
“உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து, முதன்முறையாக அமெரிக்க செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் ரஷ்யாவில் வைத்து உளவு குற்றச்சாட்டுக்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.” என்று உலக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது