டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.
புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது என்னும் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.
2026ஆம் ஆண்டுக்கான டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில், 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.
விருது பெற்றவர்களில் ஒருவரான Prabath Pullay, வான்கூவரிலுள்ள, சால்வேஷன் ஆர்மி என்னும் திருச்சபை மற்றும் சமூக சேவை அமைப்பு நடத்தும் Belkin Communities of Hope என்னும் அமைப்பில் எக்சிகியூட்டிவ் இயக்குநராக உள்ளார்.

இவர், 1996ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர் ஆவார்.
இலங்கைத் தமிழரான Roy Ratnavel என்பவரும் 2026ஆம் ஆண்டுக்கான டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
தனது 18ஆவது வயதில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த Roy Ratnavel, ஏற்கனவே 2025ஆம் ஆண்டுக்கான Tamil American Pioneer (TAP) Award மற்றும் 2020ஆம் ஆண்டு, Best Executive Award ஆகிய விருதுகளைப் பெற்றவர் ஆவார்.

இந்தியர்களைப் பொறுத்தவரை, ஷிவானிஸ் கிச்சன் என்னும் உணவு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய Shivani Dhamija, Fraser Health அமைப்பில் Regional director பொறுப்பு வகிக்கும் Sneha Jain,
கலையுலகைச் சேர்ந்த Aparna Rangnekar, Irrigation Industry Association of British Columbia அமைப்பில் Executive director பொறுப்பு வகிக்கும் Poshak Sachdeva, தொழிலதிபரான Jatinder Pal Singh மற்றும் நடிகர் மற்றும் எழுத்தாளரான Supinder Wraich ஆகியோருக்கு டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
