News

உக்ரைன் மீது ரஷ்யா ‘ட்ரோன்’ தாக்குதல்: ஏழு மணி நேரம் நீடித்ததால் பதற்றம்

 

‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதன்முறையாக துருக்கியில், கடந்த வாரம் நேரடி பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேர பேச்சின் முடிவில், இரு நாட்டு போர்க்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் முதல் இரு தரப்பிலும் போர்க்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியது. இதில், பெரும்பாலானவை இடைமறித்து வீழ்த்தப்பட்டன.

இதற்கு பதிலடி தரும் வகையில், உக்ரைன் தலைநகர் கீவில், ரஷ்யா நேற்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. அடுத்தடுத்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ‘ட்ரோன்’களை சமாளிக்க முடியாமல், உக்ரைன் ராணுவம் திணறியது. அடுத்தடுத்து பாய்ந்து வந்த ஏவுகணைகள் குடியிருப்புகள், கடைகள் மீது விழுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தின.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top