ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வொல்கர் டர்க் (Volker Türk)இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை அவர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயமாக மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று இந்த விடயத்தை அறிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது அவர் அரச அதிகாரிகள், சிவில் அமைப்புகள், மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினருடன் சந்திப்பு நடத்தவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மனித உரிமைகள் நிலைமை, நிலையான வளர்ச்சி, மறுசீரமைப்புகள் மற்றும் சமூக நல்லிணக்க முயற்சிகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.