News

கிரீஸில் மூன்றாவது நாளாக தொடரும் காட்டுத் தீ

கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவில், மூன்றாவது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டின் நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர் முயன்று வருகின்றனர்.

கிழக்கு ஏகன் தீவான சியோஸிலுள்ள, வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களின் மீது தொடர்ந்து பரவி பல அடி உயரத்துக்கு எரியும் காட்டுத் தீயால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தீவின் மத்திய நகர் பகுதியில் இக்காட்டுத் தீ பரவியுள்ளதால், கடந்த சில தினங்களாக அங்குள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை வரையான நிலவரப்படி, இத்தீயை அணைக்கும் பணியில் சுமார் 444 தீயணைப்புப் படை வீரர்கள், 85 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் ஈடுபட்டுள்ளனர். 11 ஹெலிகொப்டர்களும் 02 விமானங்களும் காட்டுத் தீயின் மீது தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

இக் காட்டுத் தீ மர்ம நபர்களின் செயற்பாடுகளால் உருவாகியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதால், அது தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top