ஓமன் நாட்டின் மிக முக்கியமான சலாலா துறைமுகத்தில், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது ஈரான், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது.
மேற்காசிய நாடான ஓமனின் சலாலா துறைமுகம், ஆசியா – ஐரோப்பா இடையேயான வர்த்தகப் பாதையின் மையத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களை கையாளும் திறன் கொண்ட இத்துறைமுகத்தில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், சில ட்ரோன்கள் தப்பி எண்ணெய் கிடங்குகளை தாக்கியதால் பெரும் தீ பற்றி எரிந்தது. இதில் வணிக கப்பல்களுக்கு சேதம் இல்லை.
நாட்டின் எண்ணெய் விநியோகத்தில் பெரிய பாதிப்போ இல்லை என்று ஓமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் துறைமுக செயல்பாடுகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கியனுடன் தொலைபேசியில் பேசி, இத்தாக்குதல் குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.
