News

உலகையே அதிரவைத்த September 11 attacks மீண்டும்! ஈரான் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்

2001ஆம் ஆண்டில் நடந்த September 11 attacks (9/11) வரலாற்றில் மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், ஈரானின் உயர்நிலை தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் அலி லாரிஜானி, ஈரானை குற்றம் சாட்டும் வகையில் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை உருவாக்கும் சதி திட்டமிடப்பட்டு வருவதாக எச்சரித்துள்ளார்.

அவர், “ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய வலையமைப்பின் மீதமுள்ள உறுப்பினர்கள், 9/11 போன்ற ஒரு சம்பவத்தை உருவாக்கி அதற்கான பொறுப்பை ஈரானின் மீது சுமத்தும் சதித் திட்டம் வகுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இப்படிப்பட்ட பயங்கரவாதத் திட்டங்களுக்கு ஈரான் அடிப்படையாகவே எதிராக உள்ளது. அமெரிக்க மக்களுடன் எங்களுக்கு எந்தப் போரும் இல்லை” என்று தனது X பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தற்போது ஈரானுடன் போரில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

September 11 attacks (9/11)  என்பது, 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற,, உலகை அதிரவைத்த ஒருங்கிணைந்த தற்கொலை பயங்கரவாதத் தாக்குதல்களின் தொடராகும்.

இந்த தாக்குதலை அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய 19 பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். அவர்கள் நான்கு பயணிகள் விமானங்களை கடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில், இரண்டு விமானங்கள் நியூயோர்க் நகரில் உள்ள World Trade Center கட்டிடத்தின் இரட்டை கோபுரங்களில் மோதின. மூன்றாவது விமானம் அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான The Pentagon கட்டிடத்தில் மோதியது.

நான்காவது விமானம், பயணிகள் கடத்தலாளர்களுக்கு எதிராக போராட முயன்றபோது, பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள கிராமப்புறப் பகுதியில் விழுந்தது.

இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா உலகளாவிய அளவில் “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” (Global War on Terror) எனப்படும் இராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது.

இதன் நோக்கம் பயங்கரவாத அமைப்புகளையும், அவற்றை ஆதரிப்பதாக கருதப்பட்ட அரசுகளையும் எதிர்த்து நடவடிக்கை எடுப்பதாகும்.

இந்நிலையில், கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து மோதல் தீவிரமடைந்தது.

அந்த தாக்குதல்களில் ஈரானின் உயர்மதத் தலைவர் அயதுல்லா அலி கமெனி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர் மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

இதற்கு பதிலாக ஈரான், இஸ்ரேலையும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொண்டு வருகின்றது.

அதேவேளை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் பல இலக்குகளை தொடர்ந்து தாக்கி வருகின்றன. இந்தப் மோதலில் இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலானோர் ஈரானியர்கள் என கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகன் வெளியிட்ட தகவலின்படி, போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானில் 15,000க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன.

மேலும், அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்ததாவது, அமெரிக்க கடற்படையின் USS Tripoli என்ற தாக்குதல் கப்பலும் சுமார் 2,500 மரீன் படையினருடன் ஈரானின் கார்க் தீவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த September 11 attacks (9/11)தாக்குதலை போல ஒரு பயங்கரவாத தாக்குதலை ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய வலையமைப்பின் மீதமுள்ள உறுப்பினர்கள் திட்டமிட்டு வருவதாக ஈரான் தெரிவிக்கின்றது.

அத்துடன், இந்த தாக்குதலை நடத்தி விட்டு அதற்கான பொறுப்பை ஈரானிய அரசாங்கத்தின் மீது புகுத்த அந்த நபர்கள் திட்டமிட்டு வருவதாக ஈரான் எச்சரித்துள்ளமை சர்வதேச போர்பதற்றத்தில் புதிய திருப்பமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top