News

பிலிப்பைன்ஸில் சுற்றுலா கப்பலில் தீ விபத்து – 5 பேர் பலி – 80க்கும் மேற்பட்டோர் மாயம்

மேற்கு பிலிப்பைன்ஸின் பலவான் தீவுக்கு அப்பால்  படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5பேர் உயிரிழந்துள்ளதுடன்  80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (10.09.2026) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

பலவான் அருகிலுள்ள கொரோன் கடற்பகுதியில் MV June Astrea என்ற படகில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

படகில் 117 பயணிகளும் 17 பணியாளர்களும் இருந்ததாக கடலோர காவல்படை பேச்சாளர் கொமடோர் நோமி கயாபியாப் தெரிவித்துள்ளார்.

எனினும், மீட்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த எண்ணிக்கைகளில் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top