நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக்சொல்ஹெய், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரைத் தான் சந்தித்துப் பேசினார் என்று எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Very good meeting in Colombo with two old friends – leading Tamil parliamentarians Sumanthiran and Shanakiyan. Exciting discussion on the way forward for Sri Lanka 🇱🇰 – economic recovery, green developments and political reform. pic.twitter.com/BqAz2yFxDa
— Erik Solheim (@ErikSolheim) October 13, 2022
“நாடாளுமன்ற உறுப்பினர்களும் பழைய நண்பர்களுமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருடன் கொழும்பில் சந்தித்து உரையாடியிருந்தேன்” என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பொருளாதார மீட்சி, பசுமையான அபிவிருத்திகள் மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது