News

லண்டன் விபத்தில் இலங்கை இளைஞன் ஸ்தலத்தில் பலி, இருவர் காயம்.

பிரித்தானியாவின் லண்டனில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் நேற்று அதிகாலை வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உட்பட மூன்று பேர் பயணித்த கார் ஒன்று மரத்தில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் 29 வயதான இளைஞன் உயிரிழந்த நிலையில், 20 மற்றும் 25 வயதுடைய இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சவுத் ஹாரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top