News

ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு பேர் உயிரிழப்பு – வடக்கு கென்யாவில் சோகம்

 

வடக்கு கென்யாவின் தொலைதூர பகுதி ஒன்றில் சஃபாரி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஐந்து அமெரிக்கர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் காவல்துறை மற்றும் அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளன.

சம்புரு மாவட்டத்தில் உள்ள லோய்சாபா வனப்பாதுகாப்புப் பகுதியில் இருந்து இவாசோ நைரோ பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளானதாக கென்யா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆறு பயணிகள் மற்றும் விமானி என மொத்தம் ஏழு பேர் பயணம் செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நேற்று (புதன்கிழமை) இரவு, சம்புருவின் காவல்துறை தலைவர் டேவிட் என்கோரோய், ஹெலிகாப்டரில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்துவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாஷிங்டனில், உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் அமெரிக்கர்கள் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

“கென்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜோஸ் உயிரிழந்தார் என்ற துயர செய்தியை கேட்டு நாங்கள் மிகுந்த துயரமடைந்தோம்,” என்று மியாமியில் உள்ள என்.பி.சி. துணை நிறுவனம், என்.பி.சி. யுனிவர்சல் மற்றும் டெலிமுண்டோ தலைமைகளின் கூட்டறிக்கையில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளது.

“கென்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜோஸ் உயிரிழந்தார் என்ற துயர செய்தியை கேட்டு நாங்கள் மிகுந்த துயரமடைந்தோம்,” என்று மியாமியில் உள்ள என்.பி.சி. துணை நிறுவனம், என்.பி.சி. யுனிவர்சல் மற்றும் டெலிமுண்டோ தலைமைகளின் கூட்டறிக்கையில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top