600 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் நேற்று இரவு (15) முதல் இன்று காலை (16) 6.30 மணி வரை நடைபெற்றது என்றும், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு 201 ஆளில்லா விமானங்களை அழித்தது என்றும் அவர் கூறினார்.
ரோஸ்டோவ் பிராந்தியத்தின் மூன்று நகரங்கள் மற்றும் ஒன்பது மாவட்டங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், ரஷ்ய இராணுவத்தால் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்க முடிந்தது.
